QR முறைமையை மீறி எரிபொருள் வழங்கும் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் தொடர்பாக சட்டம் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருவதாகவும், அவற்றின் உரிமங்களை இடைநீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஜே. ராஜகருண தெரிவித்தார்.
மேலும், அத்தகைய எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் குறித்து பொலிஸாருக்கோ அல்லது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கோ பொதுமக்கள் தொடர்ந்து தகவல் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.














