தொடர்ந்து நிலவி வரும் எரிபொருள் விநியோகப் பிரச்சினைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக இன்று (18) முதல் மறு அறிவிப்பு வரும் வரை, ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுத்துறை ஊழியர்களுக்கு வாராந்திர விடுமுறை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதித்துறைக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார்.
மேலும், அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் மற்றும் தனியார் பயிற்சி வகுப்புகள் ஆகிய இரண்டும் அன்றைய தினம் தங்கள் செயல்பாடுகளை நிறுத்தி வைக்குமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
இருப்பினும், சுகாதாரம், துறைமுகங்கள், குடிநீர் வழங்கல் மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என ஆணையளர் ஜெனரல் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், சிறப்பு விடுமுறை காரணமாக இன்று இயங்கவிருந்த ரயில் சேவைகள் சனிக்கிழமை அன்று இன்றைய அட்டவணைப்படி இயங்கும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, பிரதான வழித்தடத்தில் 29 ரயில் சேவைகளும், மலையக வழித்தடத்தில் 17 சேவைகளும், கடலோர வழித்தடத்தில் 33 சேவைகளும் இயக்கப்படும்.
மேலதிக சேவைகளாக, களனிப் பள்ளத்தாக்கு வழித்தடத்தில் ஐந்து, புத்தளம் வழித்தடத்தில் ஒன்பது, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை வழித்தடங்களில் ஆறு சேவைகள் இயக்கப்படும்.
அதேநேரம், இலங்கை போக்குவரத்து சபை (SLTB), நாடு முழுவதும் பேருந்து சேவைகள் திட்டமிட்டபடி தொடர்ந்து இயங்கும் என்று தெரிவித்துள்ளது.
தேவைப்படும் இடங்களில் சில கால அட்டவணைகள் சரிசெய்யப்பட்டுள்ளதாகவும், பயணிகளின் தேவையின் அடிப்படையில் தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்குவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.












