ஒடிஷாவின் கட்டாக்கில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.
ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் உள்ள எஸ்.சி.பி., அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையின் ஐ.சி.யூ., எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவில், நேற்று முன்தினம் அதிகாலை திடீரென தீப்பிடித்தது.
மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு, அங்கிருந்த 23 நோயாளிகளை வேறு ஐ.சி.யூ.,வுக்கு மாற்றினர்.
தீயணைப்பு படையினர் விரைந்து, பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும் 10 நோயாளிகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.
விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற சென்ற 11 பேருக்கு காயம் ஏற்பட்டது.
இந் நிலையில், தீக்காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர், நேற்று காலை உயிரிழந்தனர்.














