மத்திய கிழக்கு நாடுகளுக்கான பல விமானச் சேவைகளை இரத்து செய்வதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு மற்றும் துபாய்க்கு இடையேயான UL231/UL232 விமானச் சேவைகள் 2026 மார்ச் 19 மற்றும் 20, ஆகிய திகதிகளில் இரத்து செய்யப்பட்டுள்ளன.
UL253/UL254 (கொழும்பு–தம்மாம்), UL217/UL218 (கொழும்பு–டோஹா) மற்றும் UL229/UL230 (கொழும்பு–குவைத்) ஆகிய விமானச் சேவைகள் 2026 மார்ச் 28 இவரை இரத்து செய்யப்பட்டுள்ளது.
பயணிகள், புதுப்பிப்புகளுக்காக விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் வழியாக விமான நிலவரங்களைத் தவறாமல் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட பயணிகள் உதவிக்குத் தங்களது உலகளாவிய தொடர்பு மையத்தையோ அல்லது தத்தமது பயண முகவர்களையோ தொடர்புகொள்ளுமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கேட்டுக்கொண்டது.













