எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கையளித்தனர்.
பிரதான எதிர்க்கட்சி கொறடா நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக இன்று காலை சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் இந்த தீர்மானத்தை கையளித்தார்.
இந்தத் தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
நுரேச்சோலையில் உள்ள லக்விஜயா நிலக்கரி மின் நிலையத்திற்குத் தேவையான மற்றும் தரமான நிலக்கரியைக் கொள்முதல் செய்வதை உறுதிசெய்யும் தனது முதன்மைக் கடமையை எரிசக்தி அமைச்சர் நிறைவேற்றத் தவறிவிட்டார் என்றும், நாட்டின் மிக முக்கியமான எரிசக்திச் சொத்தை மேற்பார்வையிடுவதில் இத்தகைய பெரும் அலட்சியம் காட்டுவது ஒரு அமைச்சரின் பொறுப்பை அடிப்படையாக மீறுவதாகும் என்றும் அந்தத் தீர்மானம் கூறுகிறது.












