பராட்டே சட்டத்தின் அமுலாக்கத்தை உடனடியாக இடை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் தொழில்முயற்சியாளர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் கொழும்பில் இன்று (25) சந்திப்பொன்று இடம்பெற்றது.
அந்த சந்திப்பின் பின்னரே எதிர்க்கட்சித் தலைவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வேகமாக எரிபொருட்களின் விலைகள் அதிகரித்தமையினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு 52% பங்களிப்புப் பெற்றுத் தரும் நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் தொழில்முனைவோரும் கடுமையான சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த எரிபொருள் விலை ஏற்றம் உற்பத்தி சுழற்சிக்கும் தேவை மற்றும் விநியோக சங்கிலிக்கும் கடுமையான எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் தொழில்முனைவோர் 45 இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் பல்வேறு குடும்பங்களுக்கு வாழ்வாதாரங்களையும் பெற்றுத் தருகின்றனர்.
இந்த துறை சரிந்தால் நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி சிதறி குடும்ப பொருளாதாரம் சரிந்து உற்பத்தி திறன் பலவீனப்படும்.
இந்த நிலையில் தற்போதைய அரசாங்கம் தலையிட்டு நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் தொழில்முனைவோருக்கும் ஆதரவையும் பக்க பலத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
அரசாங்கம் டிரில்லியன் கணக்கான பணத்தை திரட்டி திறைசேரியை நிரம்பியுள்ளதாக கூறுவதால் 2019 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ஐந்து சோகமான சம்பவங்களுக்கு முகம் கொடுத்து வீழ்ச்சி கண்ட நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் தொழில்முனைவோரையும் மீண்டும் தூக்கி நிறுத்த வேண்டும்.
நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பக்க பலத்தைப் பெற்றுத் தரும் இந்த தொழில் பிரிவினருக்கு இன்னும் உரிய கவனிப்பு கிடைக்கவில்லை.
ஆகையினால் உடனடியாக பராட்டே சட்டத்தின் அமுலாக்கத்தை இடை நிறுத்த வேண்டும்.
வீழ்ச்சி கண்ட தொழில் முயற்சிகளை தூக்கி விட வேண்டும். நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் தொழில்முனைவோர்களினது கடன்களை அவர்களால் மீளச் செலுத்துவதற்கு முடியுமான வகையில் மறுசீரமைப்புக்கு செல்ல வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.












