இன்று (31) நள்ளிரவு முதல் பல உணவுப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணங்களைத் திருத்தியமைக்க அரசாங்கம் எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்த விலை உயர்வு அமுல்படுத்தப்படுகிறது.
அதன்படி, ஃபிரைடு ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகள் 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், பால் தேநீர் மற்றும் பிளேன் டீ ஆகியவற்றின் விலைகளும் 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.












