விரிவடைந்து வரும் மத்திய கிழக்கு மோதலில் பிரிட்டிஷ் இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து தெஹ்ரான் பரிசீலித்து வருவதாக, இங்கிலாந்துக்கான ஈரானிய தூதுவர் சையத் அலி மூசாவி (Seyed Ali Mousavi) தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா குளோசெஸ்டர்ஷயரில் உள்ள ஆர்ஏஎஃப் ஃபேர்ஃபோர்ட் (RAF Fairford in Gloucestershire) மற்றும் சாகோஸ் தீவுகளில் உள்ள டியாகோ கார்சியா ஆகிய பிரிடட்ன் தளங்களிலிருந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இங்கிலாந்துப் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் ஆரம்பத்தில் டொனால்ட் ட்ரம்பிற்கு பிரிட்டன் தளங்களைப் பயன்படுத்த அனுமதி மறுத்தார்.
ஆனால் தெஹ்ரான் ஹார்முஸ் நீரிணையை முற்றுகையிடத் தொடங்கிய பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.
இந்த நிலையில், இங்கிலாந்து அரசாங்கத்தின் இந்த செயலானது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என செவ்வாயன்று ஈரானிய தூதுவர் சையத் அலி மூசாவி கூறினார்.
மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரில் தங்களைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து ஈரான் அனைத்து வழிகளிலும் பரிசீலிக்கும், அது குறித்து எமது இராணுவ அதிகாரிகள் தீர்மானம் எடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
ஈரானின் சாத்தியமான ஏவுகணைத் தாக்குதலுக்கு எதிராக பிரிட்டன் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக முன்னாள் இராணுவத் தளபதிகள் எச்சரித்த ஒரு வாரத்திற்குப் பின்னர் இந்த அச்சுறுத்தல் வந்துள்ளது.














