23வது உலக கிண்ண கால்பந்து போட்டியானது வருகின்ற ஜீன் மாதம் 11ம் திகதி ஆரம்பமாகி ஜீலை மாதம் 19ம் திகதிவரை அமெரிக்கா, மெக்சிகோ,கனடா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது.
இந்த போட்டிகளில் பங்குபற்றும் 48 அணிகளில் இதுவரை 42 அணிகள் தகுதிப்பெற்று விட்டன, மீதமுள்ள 6 அணிகளை தேர்வு செய்வதற்கான கடைசி கட்ட தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன.
இதில் 4 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டிருந்தன, ஓவ்வொரு பிரிவிலும் இரு அரையிறுதி போட்டிகள் நடைபெற்று அதில் வெற்றிப்பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடி அதில் வெற்றியாளராக மாறும் அணி உலக கோப்பை போட்டிற்குள் நுழையும்.
4 முறை சம்பியனான இத்தாலி அணி இறுதிப்போட்டியில் பொஸ்னியா மற்றும் ஹெர்ஸேகோவினா அணியை எதிர்கொண்டது.
போட்டி தொடங்கி 15வது நிமிடத்திலேயே இத்தாலி அணியின் மொய்ஸ் கீன் தனது அணியை 1-0 என முன்னிலைப்படுத்தி அசத்தினார். இதற்கு பதிலடி கொடுக்க பொஸ்னியா அணியும் முயற்சிகளை மேற்கொண்டது.
இத்தாலி வீரர் பஸ்டொனி 41வது நிமிடத்தில் பொஸ்னியா வீரரை கோல் அடிக்க விடாமல் தடுத்தமைக்காக விதிமீறலில் ஈடுபட்டமைக்காக நடுவரால் அவருக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது.
பின்னர் முதல் பாதி நிறைவடைந்த இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில் போட்டியின் 79வது நிமிடத்தில் பொஸ்னியா அணியின் ஹரிஸ் டபக்கோவிக் முக்கியமான கோல் ஒன்றினை பதிவு செய்து போட்டியை சமப்படுத்தினார். இதனால் இத்தாலி அணி அதிர்ச்சியடைந்தது.
இந்நிலையில் வெற்றிக்கோலினை பதிவு செய்ய இரு அணிகளும் மும்முரமாக மோதிக்கொண்டனர்.
போட்டி நேரம் நிறைவுக்கு வந்தும் இரு அணியும் கோலினை பதிவு செய்ய முடியாததால் நடுவரால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது.
30 நிமிடங்கள் மேலதிகமாக கிடைத்த நிலையில் மீண்டும் போட்டி சூடு பிடிக்க தொடங்கியது.
இருந்தும் அதிலும் இரு அணிகளும் கோலினை பதிவு செய்யாத நிலையில் போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க போட்டி பெனால்ட்டி சூட் முறைக்கு மாற்றப்பட்டது.
இதன்போது முதல் கோலினை இத்தாலி வீரர் தவறவிட பொஸ்னியா கிடைத்த வாய்ப்புக்களை சரியாக கோலாக மாற்றியது.
மீண்டும் 3வது வாய்ப்பில் இத்தாலி அணி மீண்டும் தவற விட பொஸ்னியா அணி 4 கோல்களையும் சரியாக அடித்து நீண்ட வருடங்களுக்கு பிறகு உலக கிண்ண போட்டிக்கு தகுதிப்பெற்று அசத்தியது.
எதிர்பாரத தோல்வியை சந்தித்த இத்தாலி அணி இம்முறை உலக கிண்ண தொடருக்கு தகுதிப்பெறாமல் சோகத்துடன் வெளியேறியது.

தோல்வியின் பின் கருத்துத் தெரிவித்த இத்தாலி அணியின் பயிற்சியாளர் ஜெனாரோ கத்தூசோ (Gennaro Gattuso), “எனது வீரர்கள் இத்தகையதொரு வலியை அனுபவிக்கத் தகுதியானவர்கள் அல்ல. அவர்களின் உழைப்பைக் கண்டு நான் பெருமையடைகிறேன். ஆனால் இந்தத் தோல்வியை ஜீரணிக்க கடினமாக உள்ளது” என உருக்கமாகத் தெரிவித்தார்.















