நிலையற்ற அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தத்தில் ஏற்படும் முன்னேற்றங்களை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருவதால், வியாழக்கிழமை (09) காலை ஆசிய வர்த்தகத்தில் உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்தன.
அதன்படி, உலகளாவிய அளவுகோலான பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 3.3% உயர்ந்து 97.90 அமெரிக்க டொலர்களாக (£73.11) இருந்தது.
அதேநேரத்தில், அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 3.2% சதவீதம் உயர்ந்து 97.55 அமெரிக்க டொலர்களாக வர்த்தகமானது.
எனினும், பெப்ரவரி 28 அன்று மோதல் தொடங்குவதற்கு முன்பு இருந்ததை விட எண்ணெய் விலைகள் அதிகமாகவே உள்ளன.
அப்போது, ஒரு பீப்பாய் சுமார் 70 டொலர் என்ற அளவில் வர்த்தகமாகி வந்தது.
லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ச்சியான கொடிய தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, நிபந்தனைக்குட்பட்ட இரண்டு வார கால போர் நிறுத்தம் சிக்கலில் உள்ளது.
இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்தால், பதிலடி தாக்குதல் கொடுக்கப்படும் என்று தெஹ்ரான் எச்சரித்துள்ளது.
முக்கியமான ஹார்முஸ் நீர்வழியை மீண்டும் திறப்பதை உள்ளடக்கிய ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, புதன்கிழமை அன்று எண்ணெய் விலைகள் சரிந்தன.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, நீரிணையை கடக்க முயற்சிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் அச்சுறுத்தியதைத் தொடர்ந்து, அந்த முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடத்தில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.















