கேரளா, அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இன்று (9) ஒரே கட்டமாக 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு நடவடிக்கைாயனது மாலை 5 மணி வரை நடைபெறும்.
தேர்தல் முடிவுகள் மே 4 ஆம் திகதி அறிவிக்கப்படும்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் நோக்குடன், 126 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் சட்டமன்றத்திற்கான முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்கள் தொடங்கியுள்ளன.
கேரளாவில் உள்ள 140 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெறும் இந்தத் தேர்தலில், சிபிஐ(எம்) தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) ஆகிய மூன்று அணிகளுக்கிடையே போட்டிகள் நிலவுகின்றன.
புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த யூனியன் பிரதேசம் தற்போது, முதலமைச்சர் என். ரங்கசாமி தலைமையிலும், பாஜகவின் ஆதரவுடனும் அகில இந்திய என். ஆர். காங்கிரஸ் (AINRC) தலைமையிலான கூட்டணியால் ஆளப்பட்டு வருகிறது.
மேலும், கர்நாடகா, நாகாலாந்து மற்றும் திரிபுரா முழுவதும் உள்ள பல சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களும் இன்று நடைபெறுகின்றன.
கோவாவின் போண்டா இடைத்தேர்தலுக்கான தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை பம்பாய் மேல் நீதிமன்றம் செல்லாதது என அறிவித்து, ஏப்ரல் 9 தேர்தலை இரத்து செய்தமையும் குறிப்பிடத்தக்கது.














