லண்டனில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பாக 11 பொலிஸ் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
Metropolitan Police , சார்ந்த 11 அதிகாரிகள் 2023ஆம் ஆண்டு Wimbledon பகுதியில் நடந்த விபத்து விசாரணையை முறையாக மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டில் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த விசாரணையை காவல்துறை நடத்தைக்கான சுதந்திரமான அலுவலகம் ( Independent Office for Police Conduct (IOPC)) மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே , இந்த விபத்தில் 8 வயதான இரு மாணவிகள், நூரியா சஜ்ஜாத் நூரியா சஜ்ஜாத் (Nuria Sajjad Nuria Sajjad) மற்றும் செலினா லாவ் (Selena Lau) உயிரிழந்தனர். 2023 ஜூலை மாதம், பள்ளி நிகழ்ச்சியின் போது ஒரு லாண்ட் ரோவர் கார் பள்ளி வளாகத்திற்குள் நுழைந்ததாலே இந்த துயர சம்பவம் ஏற்பட்டது.
அந்த வாகனத்தை ஓட்டிய கிளேர் ஃப்ரீமண்டில்(Claire Freemantle) மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இருப்பினும் , உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினர் இந்த விசாரணையில் பல குறைகள் உள்ளதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். இதனைத் தொடர்ந்து IOPC விசாரணை தற்போ து ஆரம்பிக்கப்பட்டுள்ளது
குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த விசாரணை தொடங்கப்பட்டிருப்பது எங்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. அந்த நாளில் என்ன நடந்தது மற்றும் அதன் பின்னர் பொலிசார் எடுத்த நடவடிக்கைகள் குறித்து முழு உண்மை வெளிவர வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை தற்போது நடைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது













