எஹெலியகொட நகரில் நேற்று இரவு (15) பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 13 பேர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, வீதியில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தின்போது அந்த கார் ஒரு மோட்டார் சைக்கிள், மூன்று முச்சக்கர வண்டிகள் மற்றும் இரண்டு கார்கள் மீது மோதியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.












