ஜப்பானில் அடுத்த வாரத்தில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்துள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வடகிழக்குக் கடற்கரைப் பகுதியில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 3 மீட்டர் (10 அடி) உயர சுனாமி அலைகள் எழக்கூடும் என்று ஜப்பான் அதிகாரிகள் திங்கட்கிழமை விடுத்த எச்சரிக்கைகளை தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
தலைநகர் டோக்கியோவிலிருந்து 530 கி.மீ (330 மைல்கள்) வடக்கே உள்ள இவாத்தே மாகாணத்திற்கு அருகிலுள்ள கடற்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான மக்கள் கடலோரப் பகுதிகளை விட்டு உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
மிகப்பெரிய அளவில் பதிவான சுனாமி அலைகள் 80 செ.மீ. உயரம் கொண்டதாக இருந்தன.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சில மணி நேரங்களுக்குப் பின்னர், சுனாமி எச்சரிக்கைகளும் ஆலோசனைகளும் விலக்கிக்கொள்ளப்பட்டன.
எனினும், அடுத்த வாரத்தில் “இன்னும் வலுவான அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய” நிலநடுக்கங்கள் ஏற்பட்டும் என்றும், இதனால் பெரிய சுனாமி அலைகள் உருவாகக்கூடும் என்று ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் இன்று எச்சரித்துள்ளது.
8.0 ரிக்டர் அல்லது அதற்கும் அதிகமான அளவில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
2011-ல் ஏற்பட்ட ஒரு மாபெரும் நிலநடுக்கத்தின் நினைவுகளால் ஜப்பான் மக்கள் இன்னும் வடுப்பட்டுள்ளனர்.
அந்த நிலநடுக்கம் ஒரு சுனாமியைத் தூண்டி, 18,000-க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றதுடன், புகுஷிமா அணுமின் நிலையத்தில் அணு உலை உருகலையும் ஏற்படுத்தியது.
நெருப்பு வளையத்தில் ஜப்பான் அமைந்துள்ள அபாயகரமான இடத்தின் காரணமாக, அது ஆண்டுக்குச் சுமார் 1,500 நிலநடுக்கங்களைச் சந்திக்கிறது,
மேலும் உலகளவில் 6.0 ரிக்டர் அளவு அல்லது அதற்கும் அதிகமான நிலநடுக்கங்களில் 10% ஜப்பானிலேயே நிகழ்கின்றன.
2011 மார்ச் மாதத்தில் இவாத்தே மாகாணத்தின் தெற்குக் கடற்கரைக்கு அப்பால், பேரழிவை ஏற்படுத்திய 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஜப்பான் தாக்கப்பட்டது; அதுவரை ஜப்பான் பதிவுசெய்ததிலேயே மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் அதுவே ஆகும்.
ஃபுகுஷிமாவில் ஏற்பட்ட அணு உலை உருகல், வரலாற்றில் நிகழ்ந்த மிக மோசமான அணுப் பேரழிவுகளில் ஒன்றாகும்.















