ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா தொடர்ந்து ஆறாவது இரவாகவும் மேற்கொண்டது.
இந்த தாக்குதலின் ஓர் பகுதியாக இன்று (17) அதிகாலையில் பொதுமக்களுக்கான கட்டமைப்பு வசதிகள் தாக்கப்பட்டதாகவும், அதில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும் ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் அமைந்துள்ள ஈரானியக் கடலோர நகரமான பண்டார் கமீரில் (Bandar Khamir) உள்ள பாலங்கள் மீது அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
மேலும், ஈரான்ஷாஹர் விமான நிலையம் மற்றும் பண்டார் அப்பாஸில் உள்ள ரயில் நிலையம் ஆகியவற்றின் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அதேநேரம், தங்கள் அண்மைய வான்வழித் தாக்குதல்களில் டஜன் கணக்கான இலக்குகள் தாக்கப்பட்டதை அமெரிக்க மத்திய கட்டளை மையம் உறுதிப்படுத்தியது.
இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவக் கட்டமைப்புகளைத் தாக்கியதாக ஈரான் தெரிவித்தது.
அண்மைய மாதங்களில், ஈரான் போர் முடிவுக்கு வரும் நிலையில் இருப்பதாக ட்ரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.
இருப்பினும், மோதலின் அண்மைய தீவிர நிலை ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இடைக்கால ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, அப்பகுதியில் ஒரு முழுமையான போரை மீண்டும் தூண்டியுள்ளது.
இதனால், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு உடன்படிக்கைக்கான வாய்ப்புகள் கேள்விக்குறியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.













