2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று (28) முதல் மே 19 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UCG) அறிவித்துள்ளது.
பெறுபேறுகள் மார்ச் 31 அன்று இணையத்தில் வெளியிடப்பட்டன.
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை, நாடு முழுவதும் 2,362 மையங்களில் நடத்தப்பட்டது.
இதில் 281,810 பரீட்சார்த்திகள் பரீட்சை எழுதினர்.
அவர்களில், 221,413 பேர் பாடசாலை மாணவர்களும், 60,397 பேர் தனியாரும் ஆவர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தகவலின்படி, 176,527 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழக சேர்க்கைக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.












