எசசெக்ஸ் மாகாணத்தில் உள்ள Southend-on-Sea நகரில் நேற்று மாலை ஏற்பட்ட பெரும் தெரு மோதலில் இரண்டு இளைஞர்கள் கத்திக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது, Southend High Street பகுதியில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது கண்ணாடி பாட்டில்கள் மற்றும் கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த இரண்டு இளைஞர்களும் முகப்பகுதியில் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சம்பவத்தையடுத்து, குயின்ஸ்வே (Queensway) முதல் ஹாம்லெட் கோர்ட் சாலை (Hamlet Court Road) மற்றும் கடற்கரைப் பகுதி வரை பொலிசார் தற்காலிக கட்டுப்பாட்டு உத்தரவை அமல்படுத்தினர். இந்த உத்தரவின் கீழ், சந்தேகமின்றி நபர்களையும் வாகனங்களையும் ஆயுதங்களுக்காக சோதனை செய்யும் அதிகாரம் பொலிசாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், முகக்கவசங்களை அகற்றும்படி பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. சம்பவத்திற்குப் பிறகு அந்தப் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பொலிசார் தொடர்ந்து அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதுடன், சம்பவத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வன்முறை சம்பவம் உள்ளூர் மக்களிடையே அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
















