முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவர்ட் கப்ராலுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் மீண்டும் ஒரு வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
கிரீஸ் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த 2012 ஆம் ஆண்டில், கிரேக்க கருவூலப் பத்திர முதலீடுகளை வாங்கியதன் மூலம் இலங்கை அரசாங்கத்திற்கு ரூ. 1.84 பில்லியனுக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டது என்று குற்றம் சாட்டியே இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்குள் 100 மில்லியன் ரூபா வைப்பீடு செய்ய வேண்டும் என்ற நீதிமன்றம் விதித்த நிபந்தனையை அவர் பூர்த்தி செய்யத் தவறியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 67(5)-ன் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.













