ஜெயிலர் – 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஜெயிலர் – 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தாக சில நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காட்சிகளில் திருப்தி இல்லாததால் இயக்குநர் நெல்சன் மேலும் 15 நாள்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு சென்னை பனையூரிலுள்ள ஆதித்யராம் ஸ்டூடியோவில் செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான படம் ‘ஜெயிலர்’. ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.
படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.600 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து ‘ஜெயிலர் 2’ படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தில் நடிகர் பாலகிருஷ்ணா, பவன் கல்யாண், சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சென்னை ஈசிஆர் சாலை பனையூரில் உள்ள ஆதித்யாராம் பிலிம் சிட்டியில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வருகிறது.
இன்று காலை படப்பிடிப்பின்போது வீடு மாதிரி செட்டப் அமைத்து அதற்கு பேன் மட்டும் பணியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த EEE படித்த 28 வயதான இளைஞர் கார்த்திகேயன் எலக்ட்ரிக் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கார்த்திகேயன் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதன்போது அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

















