உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ் சாலையில் வேன் ஒன்றும் – லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 10பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை 7:10 மணியளவில் விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேன் டிரைவர் அதிவேகமாக இயக்கியதால் தனது கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த லொறி மீது மோதியமையே விபத்துக்கு காரணம் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.














