பிரித்தானியாவின் ‘கிரேட்டர் மான்செஸ்டர்’ (Greater Manchester) பிராந்தியத்தில் இந்த ஆண்டு மேயர் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில், அங்கு புதிய வாக்குப்பதிவு முறையை உடனடியாக அமலுக்குக் கொண்டுவருதற்கான பணிகளை அந்நாட்டு அமைச்சர்கள் முடுக்கிவிட்டுள்ளனர்.
பொதுத் தேர்தல்களில் பயன்படுத்தப்படும் வழக்கமான ‘அதிக வாக்குகள் பெறுபவரே வெற்றி’ என்ற முறைக்கு மாறாக, ‘துணை வாக்குரிமை’ என்ற புதிய முறையை அமல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய முறையின் கீழ் வாக்காளர்கள் தங்களது வாக்குச்சீட்டில் தங்களுக்குப் பிடித்தமான முதலாவது மற்றும் இரண்டாவது வேட்பாளர்களை (First and Second choice) தேர்வு செய்ய முடியும்.
இதேவேளை, இந்த புதிய தேர்தல் முறை மாற்றம் இந்த மாதத்திற்கு பின்னரே அமலுக்கு வரும் என்றும், 2027ஆம் ஆண்டு மே மாதம் நடக்கும் அடுத்தடுத்த தேர்தல்களிலேயே இது பயன்படுத்தப்படும் என்றும் முதலில் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கிரேட்டர் மான்செஸ்டரில் இந்த ஆண்டு (2026) ஒருவேளை மேயர் தேர்தல் நடத்தப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளதால், அதற்கு முன்னதாகவே இந்த புதிய தேர்தல் சட்ட நடைமுறைகளை அவசரமாக அமல்படுத்த அமைச்சர்கள் தற்போது தீவிரமாக முயன்று வருகின்றனர்.












