லிங்கன் (Lincoln) நகரில் உள்ள ஏரி ஒன்றில் நீந்தச் சென்று காணாமல் போன 15 வயது சிறுவன், தீவிர தேடுதல் நடவடிக்கைக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
டெக்லான் சாயர் (Declan Sawyer) என்ற 15 வயது சிறுவனே இவ்வாறு ஏரி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் லிங்கனில் உள்ள ‘ஸ்வான்ஹோம் ஏரிக்கு’ (Swanholme Lakes) சென்ற சிறுவன் , அங்குள்ள நீரில் இறங்கியுள்ளார்.
இதன்போது எதிர்பாராதவிதமாக அவர் நீரில் மூழ்குவதை அருகிலிருந்தவர்கள் அவதானித்த நிலையில் மீட்பதற்காக முயட்சித்துள்ளனர்.
நேற்று மாலை வரை நீடித்த இந்தத் தீவிர தேடுதல் நடவடிக்கையின் முடிவில், சிறுவன் டெக்லான் ஏரிக்குள் சடலமாக மீட்கப்பட்டார்.
மேலும், இந்த மரணம் குறித்துச் சமூக ஊடகங்களில் தேவையின்றி ஊகங்களை வெளியிட வேண்டாம் என்றும், உத்தியோகபூர்வ ஆதாரங்கள் இல்லாத தகவல்களைப் பகிர வேண்டாம் என பொலிஸார் பொதுமக்களிடம் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.















