அம்பலங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலகொட பகுதியில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கைத் துப்பாக்கியும் அதற்குரிய 02 தோட்டாக்களுடனும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பலங்கொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினரால் 2026.05.25 ஆம் திகதி இரவு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 49 வயதுடைய குலீகொட பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, சந்தேகநபரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 கிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அம்பலங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













