போராட்டத்தின் போது சாண தாக்குதல் நடத்தியமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக, நவ ஜனதா பெரமுனவின் தலைவர் சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினருக்கு தலாங்கம பொலிஸாரினால் இன்று (26) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் ஹேக்கர்களினால் திருடப்பட்ட சம்பவம் குறித்து நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த மாதம் 28 ஆம் திகதி இக்குழுவினர் அவரது வீட்டிற்கு முன்னால் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்த போது சாணத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே இக்குழுவினர் அழைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மல சாணத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், அங்கிருந்தவர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலையும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.















