2026-2027 ஆம் சீசனுக்கான தேசிய வீரர் ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு 46 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்புக்கு அமைவாக, ஒப்பந்தக் காலம் 2026 ஏப்ரல் 1 முதல் 2027 மார்ச் 31 வரை நீடிக்கும்.
செயல்திறன், நிலைத்தன்மை, உடற்தகுதி, ஆற்றல் மற்றும் தேசிய அணிகளின் மூலோபாயத் தேவைகளின் அடிப்படையில் வீரர்கள் A1, A2, B1, B2, C1 மற்றும் மத்திய ஒப்பந்தம் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தேர்ந்தெடுக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் விளையாட்டின் மிக உயர்ந்த மட்டத்தில் செயல்படுவதற்குத் தேவையான ஆதரவு, கட்டமைப்பு மற்றும் வளங்கள் வழங்கப்படுவதையும், அதே நேரத்தில் நாட்டில் கிரிக்கெட்டின் நீண்டகால வளர்ச்சிக்குப் பங்களிப்பதையும் இந்த ஒப்பந்தங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

தேசிய ஒப்பந்தங்களில் புதிய சேர்க்கைகள்
கமில் மிஷார, லசித் குரூஸ்புள்ளே, விஜயகாந்த் வியாஸ்காந்த், இசித விஜேசுந்தர, வனுஜா சஹான், திலும் சுதீர மற்றும் தரிந்து ரத்நாயக்க ஆகியோர் தேசிய வீரர் ஒப்பந்தத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஒப்பந்தம் செய்யப்பட்ட அனைத்து வீரர்களுக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் வாழ்த்து தெரிவித்ததுடன், முதன்முறையாக தேசிய ஒப்பந்தங்களைப் பெறும் வீரர்களுக்குச் சிறப்பு வரவேற்பையும் அளித்துள்ளது.
இந்த ஒப்பந்தங்கள் வழங்கப்படுவது, செயல்திறனுக்கு வெகுமதி அளிப்பதிலும், வளர்ந்து வரும் திறமைகளை வளர்ப்பதிலும், மற்றும் சர்வதேச விளையாட்டு வடிவங்களில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய வலுவான வீரர் குழுவைப் பராமரிப்பதிலும் SLC கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.
வரவிருக்கும் சர்வதேசப் சீசனில் நாட்டிற்கு வெற்றியைப் பெற்றுத் தர அயராது பாடுபடும் வீரர்கள், தொழில்முறை, ஒழுக்கம் மற்றும் சிறப்பின் மிக உயர்ந்த தரங்களைத் தொடர்ந்து கடைப்பிடிப்பார்கள் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.












