• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் – சுரேஷ் சலே வகிபாகம் என்ன..??

சுரேஷ் சலேயின் மனுவை பரிசீலிப்பது ஜூலை 10 வரை ஒத்திவைப்பு

Hanushya P by Hanushya P
2026/06/11
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

சுரேஷ் சலே தாக்கல் செய்திருந்த ரிட் மனு மீதான மேலதிக பரிசீலனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி வரை இன்று ஒத்திவைத்துள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் தாம் கைது செய்யப்பட்டு, தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள தடுப்புக் காவல் உத்தரவை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி, சுரேஷ் சலே இந்த ரிட் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

மனு இன்று மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் எதிர்வரும் ஜூலை மாதம் 10ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு 02 கடிதங்கள் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்றையதினம் எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையின்போது, சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், அவரது தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு, தினமும் நோயாளர்களைப் பார்வையிடும் நேரத்தில் அவரது மனைவியும் மகனும் அவரைப் பார்வையிட அனுமதித்து உத்தரவிடுமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இருப்பினும், அந்த கோரிக்கையை நிராகரித்த கோட்டை நீதவான் பசன் அமரசேன, சந்தேக நபர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் தடுப்புக் காவலில் சிகிச்சை பெற்று வருவதால், இவ்வாறானதொரு உத்தரவைப் பிறப்பிக்க தமக்கு அதிகாரம் இல்லை எனக் குறிப்பிட்டார். இதனை தொடர்ந்தே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு இவ்வாறு இரண்டு கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் சுரேஷ் சலேயின் சட்டத்தரணி அசித் சிறிவர்தனவும் பார்வையிடுவதற்கான அனுமதி கோரி கடிதம் அனுப்பியுள்ளார். சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தனது கட்சிக்காரரின் நிலையைத் தொடர்ந்து கண்காணித்து, நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவும், அவரது உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கவும் தமக்கு தொழில்முறைப் பொறுப்பு இருப்பதாக சட்டத்தரணி அசித் சிறிவர்தன கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தனது கட்சிக்காரருடன் தொடர்ந்து
கலந்துரையாடுவது அவசியம் எனச் சுட்டிக்காட்டியுள்ள சட்டத்தரணி, தனது கட்சிக்காரரை தினமும் சந்திப்பதற்கான வாய்ப்பை வழங்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரிடம் கோரியுள்ளார்.

இதேவேளை, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என வலியுறுத்தி நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியின் பால்திய சந்திக்கு அருகில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கட்டுவாப்பிட்டி தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பொதுமக்களாலேயே இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related

Tags: Court of AppealCriminal Investigation Departmentfurther considerationwrit petition
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

செம்மணியில் இன்றைய அகழ்வில் 02 மனித என்புக்கூடுகள் அடையாளம்!

Next Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Related Posts

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு!
இலங்கை

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு!

2026-09-10
12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!
இலங்கை

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் கைது!

2026-09-10
பாகிஸ்தானில் இருந்து 2 கொள்கலன்களில் மறைத்து கொண்டுவரப்பட்ட போதைப்பொருள்
இலங்கை

பாகிஸ்தானில் இருந்து 2 கொள்கலன்களில் மறைத்து கொண்டுவரப்பட்ட போதைப்பொருள்

2026-09-10
முன்னாள் அரச ஜோதிடர் 3 மணி நேர வாக்குமூலத்தின் பின்னர் வெளியேறினார்
இலங்கை

முன்னாள் அரச ஜோதிடர் 3 மணி நேர வாக்குமூலத்தின் பின்னர் வெளியேறினார்

2026-09-10
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

2026-09-10
வெயிலின் தாக்கம் தீவிரம்; மக்கள் அவதானம்!
இலங்கை

உலகின் மிக வெப்பமான மாதமாக ஓகஸ்ட் மாதம் பதிவு

2026-09-10
Next Post
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

பல மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது மெக்சிகோ!

2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது மெக்சிகோ!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
உக்ரைன்–ரஷ்யா போர்: ரஷ்யாவுக்கு ‘புதிய தலைவலி’!

உக்ரைன்–ரஷ்யா போர்: ரஷ்யாவுக்கு ‘புதிய தலைவலி’!

0
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு!

0
12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் கைது!

0
“எல்லோருக்குமே ‘சிக்மா’ தருணம் இருந்திருக்கும்!” – ஜேசன் சஞ்சய்

“எல்லோருக்குமே ‘சிக்மா’ தருணம் இருந்திருக்கும்!” – ஜேசன் சஞ்சய்

0
பாகிஸ்தானில் இருந்து 2 கொள்கலன்களில் மறைத்து கொண்டுவரப்பட்ட போதைப்பொருள்

பாகிஸ்தானில் இருந்து 2 கொள்கலன்களில் மறைத்து கொண்டுவரப்பட்ட போதைப்பொருள்

0
உக்ரைன்–ரஷ்யா போர்: ரஷ்யாவுக்கு ‘புதிய தலைவலி’!

உக்ரைன்–ரஷ்யா போர்: ரஷ்யாவுக்கு ‘புதிய தலைவலி’!

2026-09-10
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு!

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு!

2026-09-10
12 கோடிக்கும் அதிகமான பெறுமதியான தங்க பிஸ்கட்-இலங்கையை சேர்ந்த  மூவர் கைது!

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் கைது!

2026-09-10
“எல்லோருக்குமே ‘சிக்மா’ தருணம் இருந்திருக்கும்!” – ஜேசன் சஞ்சய்

“எல்லோருக்குமே ‘சிக்மா’ தருணம் இருந்திருக்கும்!” – ஜேசன் சஞ்சய்

2026-09-10
பாகிஸ்தானில் இருந்து 2 கொள்கலன்களில் மறைத்து கொண்டுவரப்பட்ட போதைப்பொருள்

பாகிஸ்தானில் இருந்து 2 கொள்கலன்களில் மறைத்து கொண்டுவரப்பட்ட போதைப்பொருள்

2026-09-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.