நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக 4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை இன்று (12) காலை 4:00 மணி முதல் நாளை (13) காலை 4:00 மணி வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும்.
களுத்துறை, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரிய ஆகியே மாவட்டங்களுக்கே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த மாவட்டங்களில் வாழும் மக்கள் மண்சரிவு, மரங்கள் சரிந்து வீழுதல் மற்றும் பாறைகள் உருண்டு விழுதல் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.














