பிரிட்டனில் 18 வயதுடைய இளைஞர் ஹென்றி நோவாக் கொ*லை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக தண்டனை பெற்ற விக்ரம் டிக்வா (Vickrum Digwa), தனது குற்றவியல் தீர்ப்பையும் சிறைத் தண்டனையையும் எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி, இங்கிலாந்தின் சவுத்ஹாம்ப்டன் (Southampton ) நகரில் நடந்த சம்பவத்தில், ஹென்றி நோவாக் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விக்ரம் டிக்வாவை குற்றவாளியாகக் கண்டறிந்து, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் குறைந்தபட்சம் 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், தனது தண்டனையும் குற்றவியல் தீர்ப்பும் சட்டரீதியாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என விக்ரம் டிக்வா மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து, அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு விண்ணப்பம் பெறப்பட்டுள்ளதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும், இந்த மேல்முறையீடு ஏற்கப்படுமா அல்லது விசாரணைக்கு அனுமதி வழங்கப்படுமா என்பது குறித்து நீதிமன்றம் இன்னும் எந்தத் தீர்ப்பையும் வெளியிடவில்லை. அடுத்த கட்டமாக, மேல்முறையீட்டுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமா என்பதை நீதிபதிகள் பரிசீலிக்கவுள்ளனர்.

















