முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் III ஆம் தரத்திற்கு 1,252 பேர் நாளை (07) இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் III ஆம் தரத்திற்கு 1,252 பேரை இணைத்துக்கொள்வதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தலைமையில், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத்தின் பங்கேற்புடன் நாளை (07) அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.












