விலங்குகளின் பாகங்களிலிருந்து நகைகள் தயாரித்த தொழிலதிபருக்கு 2.1 மில்லியன் ரூபா அபராதம்!
வனவிலங்குகளின் உடல் பாகங்களைப் பயன்படுத்தி நகைகளைத் தயாரித்து, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்த நகைக்கடையை நடத்தி வந்த ஒருவருக்கு ரூ. 2.1 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொல்கசோவிட்ட, கஹத்துடுவவில் வசிக்கும் ஒரு தொழிலதிபருக்கு ருவன்வெல்ல நீதவான் நேற்று (08) இந்த உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
விலங்குகளின் எலும்புகள் மற்றும் உடல் பாகங்களைப் பயன்படுத்தி மோதிரங்கள் உள்ளிட்ட நகைகளை அவர் விற்பனை செய்து கொண்டிருந்தபோது, புலத்கொகுபிட்டிய வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் குருநாகல் வனவிலங்கு உதவிப் பணிப்பாளர் அலுவலகம் இணைந்து இந்தச் சோதனையை நடத்தினர்.
ஜூன் 24 அன்று நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், வனவிலங்கு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், ருவன்வெல்ல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.
வனவிலங்குகளின் உடல் பாகங்களை மோதிரங்கள் மற்றும் கழுத்தணிகளுக்காகப் பயன்படுத்தியதன் மூலம், விலங்குகள் மற்றும் தாவரங்கள் கட்டளைச் சட்டத்தை சந்தேக நபர் மீறியுள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
பயன்படுத்தப்பட்ட பொருட்களில் கருங்கற்கள், புலிப் பற்கள், யானைத் தந்தங்கள், தந்தம், சிறப்பு வகை சிப்பிகள் மற்றும் பிற பொருட்கள் அடங்கும்.
இந்த ஆபரணங்களை அணிந்தால் தீய சக்திகளை விரட்டிவிடும் என்று கூறி, அவர் மோசடியாக கழுத்தணிகளையும் மோதிரங்களையும் தயாரித்திருந்தார்.
அதன்படி, நீதிமன்றத்தில் சந்தேக நபரை குற்றவாளி என அறிவித்த பின்னர், நீதிமன்றம் அவருக்கு 21 லட்சம் ரூபா அபராதம் விதிக்க உத்தரவிட்டுள்ளார்.
அபராதத்தை மூன்று தவணைகளில் செலுத்த உத்தரவிட்ட நீதிமன்றம் , முதல் தவணையான 7 லட்சம் ரூபா தொகையை ஆகஸ்ட் 8 ஆம் திகதி செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.












