2026 ஃபிஃபா (FIFA) உலகக் கிண்ணப் போட்டியிலிருந்து வெளியேறியதால் ஏற்பட்ட ஏமாற்றத்தை ஒரு மாபெரும் தேசியக் கொண்டாட்டமாக மாற்றியமைக்கும் வகையில், நோர்வேயின் தலைநகரான ஓஸ்லோவின் வீதிகளில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு தங்கள் கால்பந்து அணிக்கு வீரர்களுக்குரிய வரவேற்பை அளித்தனர்.
கடந்த சனிக்கிழமையன்று கூடுதல் நேரத்தில் இங்கிலாந்திடம் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்ததன் மூலம், காலிறுதிச் சுற்றோடு நோர்வேயின் வரலாற்றுச் சிறப்புமிக்க உலகக் கிண்ணப் பயணம் முடிவுக்கு வந்தது.
இது அரையிறுதிக்கு முன்னேறும் நோர்வேயின் கனவைச் சிதைத்தது. இருப்பினும், தங்கள் அணியின் நாயகர்களைக் கொண்டாடுவதிலிருந்து அந்த நாட்டை இது தடுக்கவில்லை.
நோர்வேயின் கோடை வெயிலில், திங்கட்கிழமை பிற்பகல் அரச அரண்மனை வளாகம் பெருந்திரளான மக்களால் நிரம்பியது.
இதில் அ100,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தலைநகரில் தங்களது தாயகம் திரும்பும் அணிவகுப்பைத் தொடங்குவதற்கு முன்பு, நோர்வே குழுவினர் பாரம்பரிய நீர்பீரங்கி மரியாதையுடன் தரையிறங்கினர்.












