சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுபவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மகாவலி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த, பொலிஸ் விசேட அதிரடிப்படையைச் (STF) சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் டி.பி. ரணசிங்கவிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, டி.பி. ரணசிங்கவிற்கு அவரது மறைவுக்குப் பின்னர் உப-பொலிஸ் பரிசோதகர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
ஜூலை 12 அன்று பணியின் போது அவர் ஆற்றிய சேவை மற்றும் செய்த தியாகத்தை அங்கீகரிக்கும் வகையில், பொலிஸ்மா அதிபரினால் இந்த பதவி உயர்வு அங்கீகரிக்கப்பட்டது.












