மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
காற்று:
காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசும். காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வரை இருக்கும். புத்தளம் வழியாக சிலாபம் முதல் காங்கேசன்துறை வரையிலும், அம்பாந்தோட்டை வழியாக காலி முதல் பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
திருகோணமலை வழியாக வாகரை முதல் காங்கேசன்துறை வரையான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும்.
கடலின் நிலை:
புத்தளம் வழியாக சிலாபம் முதல் காங்கேசன்துறை வரையிலும், அம்பாந்தோட்டை வழியாக காலி முதல் பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். திருகோணமலை வழியாக வாகரை முதல் காங்கேசன்துறை வரையான கடல் பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படலாம்.
அம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடல் பகுதிகளில் அலையின் உயரம் சுமார் 2.0 முதல் 2.5 மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.












