கண்டி மாவட்டத்தின் திகன மற்றும் மெனிக்கின்ன ஆகிய பகுதிகளில் 48 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இன்று (23) காலை 8.30 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த நீர் விநியோகத் தடை ஜூலை 25 ஆம் திகதி வரை நீடிக்கும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காகவே இந்த நீர் விநியோகத் தடை மேற்கொள்ளப்படுகிறது.
இதனால் அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் சிரமத்திற்கு நீர் வழங்கல் சபை வருத்தம் தெரிவிப்பதுடன், நீர் விநியோகம் மீண்டும் சீராகும் வரை நுகர்வோரை நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.













