2027ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க த ஓவல் மைதானத்தில் நடைபெறும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த போட்டியானது அடுத்த ஆண்டு ஜூன் 9 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
தி ஓவல் மைதானத்தில், ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடத்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
முன்னதாக 2023-இல் இங்கு நடைபெற்ற இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியா, இந்தியாவை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றது.
அத்துடன் ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை தொடர்ந்து மூன்றாவது முறையாக இங்கிலாந்து நடத்தி வருகின்றது.
மேலும் 2031 வரை இப்போட்டிகள் இங்கிலாந்திலேயே நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டின் 150ஆவது ஆண்டைக் கொண்டாடும் வகையில், 2027 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி சிறப்பாக அமையும் என ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

















