இங்கிலாந்துக்கு எதிரான டி20 சர்வதேசத் தொடருக்கு முன்னதாக, குசல் மெண்டிஸ் மற்றும் பினுர ஃபெர்னாண்டோ ஆகியோர் காயங்கள் காரணமாகத் தொடரிலிருந்து விலகியுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது.
இவர்கள் இருவரும் தொடர்ந்து புனர்வாழ்வு சிகிச்சையில் ஈடுபட்டு வருகின்றனர்.
2026 லங்கா பிரீமியர் லீக்கின் போது இரு வீரர்களும் காயமடைந்தனர்.
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள டி20 சர்வதேசத் தொடருக்குள் அவர்கள் குணமடைய மாட்டார்கள் என்று கருதுவதினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வலது கால் தொடைத் தசைப் பாதிப்புக்காக மெண்டிஸ் புனர்வாழ்வு சிகிச்சையில் ஈடுபட்டுள்ளார்.
அதேவேளையில், இடது கை வேகப்பந்து வீச்சாளர் பினுர ஃபெர்னாண்டோ முதுகுப் பகுதிக் காயத்திலிருந்து மீண்டு வருகிறார்.
டி:20 அணியில் குசல் மெண்டிஸுக்குப் பதிலாக பவன் ரத்நாயகவும், பினுர ஃபெர்னாண்டோவுக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்கவையும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
குசல் மெண்டிஸ் இல்லாத நிலையில், இந்த டி:20 தொடரில் இலங்கை அணியை சரித் அசலங்க வழிநடத்துவார்.
இலங்கை அணி தனது 2026-ஆம் ஆண்டுக்கான சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இங்கிலாந்துக்கு எதிராக மூன்று டி:20 போட்டிகளில் விளையாடத் திட்டமிடப்பட்டுள்ளது.















