நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பில், பிரேரணைக்கு எதிராக 152 வாக்குகளும், ஆதரவாக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவத்தின் போது, அங்குள்ள கைதிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பு தொடர்பான தனது முதன்மைப் பொறுப்பையும் பொறுப்புக்கூறலையும் நிறைவேற்ற அமைச்சர் தவறிவிட்டார் எனக் குற்றம்சாட்டி, எதிர்க்கட்சிகளால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
பிரேரணை மீதான விவாதத்தைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்களிப்பில், அரசாங்கத்தின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சருக்கு ஆதரவாக வாக்களித்ததை அடுத்து, நம்பிக்கையில்லாப் பிரேரணை பெரும் வாக்கு வித்தியாசத்தில் நிராகரிக்கப்பட்டது.













