• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
போர்ட் சிட்டி மோதல்; சீனப் பிரஜை உயிரிழப்பு, பொலிஸாரின் மேலதிக விபரம்!

போர்ட் சிட்டி மோதல்; சீனப் பிரஜை உயிரிழப்பு, பொலிஸாரின் மேலதிக விபரம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/28
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜூலை 23 அன்று கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் (Colombo Port City) சீன நாட்டவர் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஒரு சீன நாட்டவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த மேலதிக விவரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

2026.07.22 அன்று இரவு, வாடகைக்கு பெற்ற கெப் வாகனமொன்றில் மூன்று சீனப் பிரஜைகள் கொழும்பு துறைமுக நகருக்கு வந்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். 

மறுநாள் அதிகாலை (23), முகமூடி அணிந்த சீனப் பிரஜைகள் குழுவொன்று அங்கு வந்து, மீன்பிடித்துக் கொண்டிருந்த மூவரையும் தாக்கியுள்ளது. 

பின்னர் அவர்களில் இருவர் ஒரு வேன் வாகனத்திலும், மற்றையவர் மற்றொரு வேன் வாகனத்திலும் ஏற்றி கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். 

அதன் பின்னர், துறைமுக நகரின் அருகிலுள்ள வாகனத் தரிப்பிடத்தில் ஒரு வேன் வாகனத்தை கைவிட்டுச் சென்றுள்ளனர்.

அதன் பின்னர், அந்த வேன் வாகனத்தில் இருந்த இரண்டு சீனப் பிரஜைகளும் வாகனத்திலிருந்து இறங்கி துறைமுக பொலிஸ் நிலையத்துக்குச் சென்று சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த துறைமுக பொலிஸ் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று மேற்கொண்ட சோதனையில், கைவிடப்பட்டிருந்த வேன் வாகனத்திலிருந்து காற்றுத் துப்பாக்கி ஒன்று, அதனுடன் ஒரு தோட்டா நிரப்பி (Magazine) மற்றும் வாக்கி-டாக்கி ஒன்றையும் மீட்டுள்ளனர்.

மேலும், துறைமுக நகரின் வெளியேறும் வாயிலருகில் நின்றுகொண்டிருந்த மேலும் இரண்டு சீனப் பிரஜைகளிடம் பொலிஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, அவர்கள் துறைமுக நகரில் பணிபுரிவதாக தெரிவித்துள்ளனர். 

அதனைத் தொடர்ந்து, அவர்களது கடவுச்சீட்டுகளின் நகல்களைப் பெற்று, Port Harbour நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியபோது, அவ்வாறான நபர்கள் அங்கு பணிபுரியவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த பொலிஸார், அரச புலனாய்வுப் பிரிவின் விமான நிலையப் பிரிவுக்கு தகவல் வழங்கியுள்ளனர். 

அதன் அடிப்படையில், 2026.07.23 அன்று மதியம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடு செல்ல முயன்ற அந்த இருவரையும் அரச புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்து, மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

பின்னர், கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இக்குற்றச்செயலுடன் அவர்கள் நேரடியாக தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், 2026.07.23 அன்று எஹலியகொட கரதன பொலிஸ் சோதனைச் சாவடி அதிகாரிகள் குழுவொன்று கெட்டஹெத்த பகுதியில் சுற்றிவளைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இடிந்து சேதமடைந்திருந்த வீடொன்றை சோதனையிட்டுள்ளனர். 

அப்போது, அந்த வீட்டின் அறையொன்றில் கபொக் கற்களால் மூடப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் இருப்பதை கண்ட அவர்கள், எஹலியகொட பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதன்படி, எஹலியகொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டபோது, அது சீனப் பிரஜையொருவரின் சடலம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. 

இதையடுத்து, அவிசாவளை நீதிமன்றத்திற்கு விடயம் அறிவிக்கப்பட்டது.

அவிசாவளை நீதவான் சம்பவ இடத்திற்குச் சென்று மரண விசாரணையை மேற்கொண்டதையடுத்து, பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு அவிசாவளை வைத்தியசாலையின் நீதிமருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தார். 

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இந்த சடலம் கொழும்பு துறைமுக நகரிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட சீனப் பிரஜையின் சடலமே என்பது தெரியவந்துள்ளது.

மேலும், எஹலியகொட பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், எஹலியகொட நுகதண்ட கோவிலுக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த Prius வகை கார் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் இதுவரை மொத்தம் எட்டு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் மூவர் ஏற்கனவே இலங்கையை விட்டு வெளியேறிவிட்டனர். 

மேலதிக விசாரணைகளுக்காக அவர்களை மீண்டும் நாட்டிற்குக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், இக்குற்றச் செயலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இரண்டு ஏர் பிஸ்டல்கள் (air pistols), ஒரு கைபேசி, ஒரு வாக்கி-டாக்கி மற்றும் பல வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கைக்கு வருவதற்கு முன்னதாக, இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வேறு பல நாடுகளிலும் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தமை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கொல்லப்பட்ட சீனப் பிரஜை, கணினி சார்ந்த மோசடிகளில் ஈடுபட்டிருந்ததாகவும், அதன் மூலம் சட்டவிரோதமாகப் பணம் சம்பாதித்திருக்கலாம் என்றும் நம்பப்படுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையமும், எஹலியகொட பொலிஸ் நிலையமும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

 

Related

Tags: policePort City clashஎஹலியகொடசீனப் பிரஜைபோர்ட் சிட்டி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிப்பு!

Next Post

2027 வரவு-செலவுத் திட்டம்: மக்களின் பரிந்துரைகளை எதிர்பார்க்கும் கொழும்பு மாநகர சபை!

Related Posts

2027 வரவு-செலவுத் திட்டம்: மக்களின் பரிந்துரைகளை எதிர்பார்க்கும் கொழும்பு மாநகர சபை!
இலங்கை

2027 வரவு-செலவுத் திட்டம்: மக்களின் பரிந்துரைகளை எதிர்பார்க்கும் கொழும்பு மாநகர சபை!

2026-07-28
தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிப்பு!
ஆசிரியர் தெரிவு

தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிப்பு!

2026-07-28
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்
இலங்கை

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

2026-07-27
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் – சுரேஷ் சலே வகிபாகம் என்ன..??
இலங்கை

சுரேஷ் சலேவின் ரிட் மனு மீண்டும் அழைப்பு

2026-07-27
உண்மையான எதிர்கட்சியாக இருப்பேன் – அர்ச்சுனா எம்.பி அதிரடி
இலங்கை

அர்ச்சுனா இராமநாதன் எம்.பி சட்டத்தரணி ஊடாக ஆஜர்

2026-07-27
எண்ணெய் விலை அதிர்ச்சி: ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு கோரும் CPC! 
இலங்கை

எண்ணெய் விலை அதிர்ச்சி: ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு கோரும் CPC! 

2026-07-27
Next Post
2027 வரவு-செலவுத் திட்டம்: மக்களின் பரிந்துரைகளை எதிர்பார்க்கும் கொழும்பு மாநகர சபை!

2027 வரவு-செலவுத் திட்டம்: மக்களின் பரிந்துரைகளை எதிர்பார்க்கும் கொழும்பு மாநகர சபை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

2026-07-14
2027 வரவு-செலவுத் திட்டம்: மக்களின் பரிந்துரைகளை எதிர்பார்க்கும் கொழும்பு மாநகர சபை 

2027 வரவு-செலவுத் திட்டம்: மக்களின் பரிந்துரைகளை எதிர்பார்க்கும் கொழும்பு மாநகர சபை 

0
போர்ட் சிட்டி மோதல்; சீனப் பிரஜை உயிரிழப்பு, பொலிஸாரின் மேலதிக விபரம்!

போர்ட் சிட்டி மோதல்; சீனப் பிரஜை உயிரிழப்பு, பொலிஸாரின் மேலதிக விபரம்!

0
தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிப்பு!

தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிப்பு!

0
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

0
லெகஸி விவகாரம்: குடும்பத்தை சிதைத்தவரை வெறுக்கிறேன்

லெகஸி விவகாரம்: குடும்பத்தை சிதைத்தவரை வெறுக்கிறேன்

0
2027 வரவு-செலவுத் திட்டம்: மக்களின் பரிந்துரைகளை எதிர்பார்க்கும் கொழும்பு மாநகர சபை 

2027 வரவு-செலவுத் திட்டம்: மக்களின் பரிந்துரைகளை எதிர்பார்க்கும் கொழும்பு மாநகர சபை 

2026-07-28
போர்ட் சிட்டி மோதல்; சீனப் பிரஜை உயிரிழப்பு, பொலிஸாரின் மேலதிக விபரம்!

போர்ட் சிட்டி மோதல்; சீனப் பிரஜை உயிரிழப்பு, பொலிஸாரின் மேலதிக விபரம்!

2026-07-28
தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிப்பு!

தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிப்பு!

2026-07-28
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

2026-07-27
லெகஸி விவகாரம்: குடும்பத்தை சிதைத்தவரை வெறுக்கிறேன்

லெகஸி விவகாரம்: குடும்பத்தை சிதைத்தவரை வெறுக்கிறேன்

2026-07-27

Recent News

2027 வரவு-செலவுத் திட்டம்: மக்களின் பரிந்துரைகளை எதிர்பார்க்கும் கொழும்பு மாநகர சபை 

2027 வரவு-செலவுத் திட்டம்: மக்களின் பரிந்துரைகளை எதிர்பார்க்கும் கொழும்பு மாநகர சபை 

2026-07-28
போர்ட் சிட்டி மோதல்; சீனப் பிரஜை உயிரிழப்பு, பொலிஸாரின் மேலதிக விபரம்!

போர்ட் சிட்டி மோதல்; சீனப் பிரஜை உயிரிழப்பு, பொலிஸாரின் மேலதிக விபரம்!

2026-07-28
தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிப்பு!

தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிப்பு!

2026-07-28
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் கலந்துரையாடல்

2026-07-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.