கொங்கோகுடியரசில் பதிவான எபோலா பாதிப்புகளின் எண்ணிக்கை 3,360 ஆக உயர்ந்துள்ளதாக
அரசாங்கத் தரவுகளை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வைரஸால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,487-ஐ எட்டியுள்ளது.
2018-2020-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட பெருந்தொற்றைப் போலவே தற்போதைய நிலைமையும் இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையங்களின் தரவுகளின்படி, அந்தக் காலகட்டத்தில் உகாண்டாவில் 3,400 எபோலா பாதிப்புகளும், 2,200 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.
2014-2016-ஆம் ஆண்டுகளில் மேற்கு ஆப்பிரிக்காவில் பதிவான எபோலா பெருந்தொற்று, வரலாற்றிலேயே மிக மோசமானதாகக் கருதப்படுகிறது.
அந்தக் காலகட்டத்தில், 28,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளும், 11,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.













