ராகம கிராம சேவை பிரிவுகளில் விதிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கை நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நேற்று (01) மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரம் காரணமாக, மூன்று ராகம கிராம சேவை பிரிவுகளில் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 246/கெண்டலியத்த பலோவா – மேற்கு, 246/சி கெண்டலியத்த பலோவா – வடக்கு மற்றும் 181/ஜி தம்புவ ஆகிய கிராம சேவா பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்கு விதிக்க நடவடிக்கை எடுத்திருந்தது.
தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதால், மூன்று கிராம சேவை பிரிவுகளில் விதிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கை உடனடியாக நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.














