டஜன் கணக்கான நாடுகளின் மீது புதிய வரிகளை விதித்ததன் மூலம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது அதிகார வரம்பை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, அமெரிக்காவின் 25 மாநிலங்கள் திங்களன்று (03) அவரது நிர்வாகத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளன.
நியூயோர்க்கில் உள்ள அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் மாநிலங்கள் வழக்குத் தாக்கல் செய்தன.
அதில் நீதிபதிகள், சுங்க வரிகளை அமுல்படுத்துவதை நிறுத்த வேண்டும், அவற்றைச் சட்டவிரோதமானவை என அறிவிக்க வேண்டும் மற்றும் பணத்தைத் திரும்ப வழங்குமாறு அமெரிக்க அரசாங்கத்திற்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரின.
கடந்த மாதம் அமெரிக்காவின் இறக்குமதியில் பெரும்பகுதியை வகித்த இலங்கை உட்பட 60 வர்த்தகக் பங்காளிகள் மீது ட்ரம்ப் விதித்த 10% முதல் 12.5% வரையிலான புதிய வரிகள் தொடர்பானதே இந்தச் சட்டரீதியான சவாலாகும்.
1974-ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டத்தின் 301-வது பிரிவின் கீழ், “கட்டாய உழைப்பு” தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி (USTR) அலுவலகம் நடத்திய விசாரணைகளைத் தொடர்ந்தே இந்த வரிகள் விதிக்கப்பட்டன.
தனது இரண்டாவது பதவிக்காலத்திற்குப் பதவியேற்றதிலிருந்து, ட்ரம்ப் உலகெங்கிலும் உள்ள வொஷிங்டனின் வர்த்தகப் பங்காளிகளுக்கு எதிராக பரந்த அளவிலான சுங்க வரிகளை விதித்து, உலக வர்த்தகத்தைச் சீர்குலைத்துள்ளார்.
சர்வதேச வர்த்தகப் பங்காளிகளால் அமெரிக்கா சுரண்டப்படுவதாக ட்ரம்ப் வாதிட்டுள்ளார்.
மேலும் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு சுங்க வரிகளை ஒரு பேரம்பேசும் கருவியாகப் பயன்படுத்த முயன்று வருகிறார்.
















