கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று (05) மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக, நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, வினாடிக்கு சுமார் 130 கனஅடி நீர் மகாவலி ஆற்றிற்கு வெளியேற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நீர் வெளியேற்றம் காரணமாக மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயரக்கூடும் என்பதால், உலப்பனை, கெலிஓயா, கம்பளை, பேராதனை மற்றும் கடுகஸ்தோட்டை பகுதிகளில் மகாவலி ஆற்றின் இருபுற தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், ஆற்றங்கரையோர மக்களும் நீர்மட்ட உயர்வு தொடர்பான எச்சரிக்கைகளை கவனத்தில் கொண்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.













