நிதியமைச்சர் ஜோன் ஹீலி (John Healey,), வரவு -செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகத்தை முழுமையாக மறுஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என தொழிற்சங்கக் கூட்டமைப்பு (TUC) வலியுறுத்தியுள்ளது .
அந்த அலுவலகத்தின் முன்கணிப்பு அணுகுமுறை முதலீட்டைத் தடுக்கிறது எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது .
பிரதமர் அன்டி பே(ர்)னாம்’ ( “Andy Burnham) ஒவ்வொரு துறையிலும் நல்ல வளர்ச்சி” ஏற்படும் என உறுதியளித்துள்ள நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 28 ஆம் திகதி தாக்கல் செய்யவுள்ள தனது முதல் வரவு -செலவுத் திட்ட அறிக்கையைப் பயன்படுத்தி, அந்த கண்காணிப்பு அமைப்பின் மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்யுமாறு நிதியமைச்சரை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
குறிப்பாக, பொது முதலீடு தனியார் மூலதனத்தை “வெளியேற்றுகிறது” என கருதுவதன் மூலம், வரவு -செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகம் அதன் நன்மைகளைக் குறைத்து மதிப்பிடுவதாகவும் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது .
இதேநேரம் “நீண்ட காலமாக வரவு -செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகம் நாடு முழுவதும் நல்ல வளர்ச்சியைத் தடுக்கும் ஒரு பெரும் சுமையாக இருந்து வருவதாக தொழிற்சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் Paul Nowak தெரிவித்துள்ளார் .
சிக்கன நடவடிக்கைகளின் சுய-தோல்வி தர்க்கத்திலிருந்து உலகம் முன்னேறிவிட்டது, இருப்பினும் வரவு -செலவுத் திட்ட பொறுப்பு அலுவல மாதிரிகள் அதன் தவறான அனுமானங்களை இன்னும் தக்கவைத்துக் கொண்டுள்ளன என்றும் ஒரு முழுமையான மறுஆய்வு மாத்திரமே நவீன பொருளாதாரத்தின் பிரதான நீரோட்டத்துக்கு கொண்டுவர முடியும் என்றும் Paul Nowak மேலும் குறிப்பிட்டுள்ளார் .
















