ஐக்கிய இராச்சியம் வறட்சி, காட்டுத்தீ மற்றும் வெப்ப அலைகள் நிறைந்த கோடைக்காலத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், சீரமைக்கப்பட்ட காலநிலை நடவடிக்கைகளுக்கு உறுதியளிக்கவும், எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான ஐக்கிய இராச்சியத்தின் சார்பைக் குறைக்கவும் அரசாங்கத்தை லண்டன் மேயர் சாதிக் கான் (Sadiq Khan) வலியுறுத்தியுள்ளார்.
“பிரிட்டனை மீண்டும் சரியான பாதைக்குக் கொண்டுவர, பிரதமர் அன்டி பே(ர்)னாம்’ ( “Andy Burnham) நிர்வாகம் நிகர பூஜ்ஜிய இலக்கை நோக்கிய தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்த வேண்டும் எனவும் மேலும் எண்ணெய் மற்றும் எரிவாயு மீதான ஐக்கிய இராச்சியத்தின் சார்பைத் தொடர்ந்து குறைக்கும் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்” எனவும் அவர் கூறியுள்ளார் .
புதிய பிரதமர் வட கடலில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதை மீண்டும் ஆதரிக்கக்கூடும் என தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் காலநிலை நிபுணர்கள் மத்தியில் கவலை அதிகரித்து வருகிறது எனவும் லண்டன் மேயர் சுட்டிக்காட்டியுள்ளார் .
கிரேட்டர் மான்செஸ்டரின் மேயராக இருந்த காலத்தில் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் கவலைகள் தொடர்பில் அன்டி பே(ர்)னாம்’ வெளிப்படையாகப் பேசிய போதிலும், அவர் பிரதமரான நிலையில் அவைகளில் பெரும்பாலும் மௌனம் காத்து வருகிறார் எனவும் லண்டன் மேயர் சாதிக் கான் (Sadiq Khan) தெரிவித்துள்ளார் .
இதேநேரம் பிரிட்டன் மற்றும் ஐரோப்பா முழுவதும் பரவிவரும் வெப்ப அலைகளையும் வறட்சிகளையும் தீவிரப்படுத்தியுள்ள, வேகமாக மோசமடைந்து வரும் காலநிலை நெருக்கடியின் யதார்த்தங்களை எதிர்கொண்டு, அரசாங்கங்கள் தங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்க வேண்டும் எனவும் லண்டன் மேயர் மேலும் குறிப்பிட்டுள்ளார் .














