சிலாபம், வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேஸ்வரம் சிவன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு இடம்பெற்ற விசேட ஆசீர்வாதப் பூஜையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (23) கலந்துகொண்டார்.
முன்னேஸ்வரம் ஆலய வளாகத்தைச் சென்றடைந்த பிரதமர், சிவபெருமானுக்கு நடத்தப்பட்ட விசேட பூஜையில் கலந்துகொண்டதோடு, ஆலயக் குருக்கள் பிரதமருக்கு விசேட ஆசீர்வாதங்களை வழங்கினார்.
இதேவேளை, வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுப் பிரசித்தி பெற்ற முன்னேஸ்வரம் ஆலயத்தின் வருடாந்த உற்சவம், ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் மிக கோலாகலமாக நடைபெறுகின்றது.
காப்புக் கட்டுதல், கணபதி பூஜை மற்றும் தினசரி விசேட பூஜைகளுக்கு மேலதிகமாக, பாரம்பரிய முறைப்படி நடைபெறும் தீமிதித்தல் உள்ளிட்ட இத்திருவிழாக் கால நிகழ்வுகளில் நாடளாவிய ரீதியிலுள்ள இந்து, பௌத்த, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய பக்தர்கள் பெருமளவில் கலந்துகொள்கின்றனர்.
இந்நிகழ்வில் பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.














