பதுளை வைத்தியசாலையில் பணியாற்றி வந்த நிலையில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த வைத்தியரின் சடலம், மஹியங்கனைப் பகுதியிலுள்ள மபகடவெவ (Mapakadawewa) பகுதி அருகில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பதுளை போதனா வைத்தியசாலையில் மயக்கவியல் நிபுணராகப் பணியாற்றி வந்த இவர், நேற்று (23) முதல் காணாமல் போயிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மீகஹகியுல (Meegahakiula) பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) கமராக்களில், குறித்த வைத்தியரின் கார் மஹியங்கனையை நோக்கிச் சென்ற காட்சி பதிவாகியிருந்தமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.
தொடர் விசாரணையில், பதுளை – மஹியங்கனை கால்வாய் வீதியில் அமைந்துள்ள 17-வது மைல் கல் பகுதிக்கு அருகிலுள்ள மபகடவெவ பகுதியில், நேற்று இரவு அந்த வைத்தியரின் கார் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

















