ஹங்கேரியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஏழு இலட்சத்து 236பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்டுள்ள 32ஆவது நாடாக விளங்கும் ஹங்கேரியில் கொவிட்-19 தொற்றினால் எட்டு இலட்சத்து நான்காயிரத்து 538பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29ஆயிரத்து 733பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் 156பேர் பாதிக்கப்பட்டதோடு ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை அங்குள்ள மருத்துவமனைகளில் 74ஆயிரத்து 569பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 110பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.



















