அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாம் டோஸாக பைசர் அல்லது மொடர்னா தடுப்பூசிகளை வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கான அனுமதியை சுகாதார அமைச்சின் தொற்று நோய் தொடர்பான ஆலோசனைகுழு வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
நாட்டில் அவசர நிலைமைகளின்போது மொடர்னா தடுப்பூசியை வழங்க தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.














