• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
பண்டோரா பேப்பர்ஸ் குற்றச்சாட்டு : விசாரணைக்கு ஜனாதிபதி உத்தரவு

பண்டோர ஆவண விவகாரம்: பணத்தை வேறு வங்கிகளுக்கு மாற்றினார் நடேசன் – வெளியான முக்கிய தகவல்

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2021/12/14
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
144 2
A A
0
70
SHARES
2.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தொழிலதிபர் திருக்குமார் நடேசன் மற்றும் அவரது மனைவி நிருபமா ராஜபக்ஷ தொடர்பான பண்டோரா ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு அவர்கள் பணத்தை மாற்றியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினருமான வசந்த சமரசிங்க நேற்று (திங்கட்கிழமை) இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அவுஸ்ரேலியாவில் வசிக்கும் தனது மகனுடன் இந்த மாதம் சிங்கப்பூரில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கி இருந்து பணத்தை மாற்றுவதற்காக பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகளுடன் திருக்குமார் நடேசன் சந்திப்புகளை நடத்தினர் என அவர் குற்றம் சாட்டினார்.

குறித்த விடுதிக்கு ஒரு நாளைக்கு 8,500 சுவிஸ் பிராங்குகள் தேவைப்படுகின்ற நிலையில் பார்வையாளர்கள் அனுமதியுடன் ஒரு நாளைக்கு 12,000 சுவிஸ் பிராங்குகள் செலவாகும் என்றும் இவர்கள் 15 நாட்கள் அங்கு தங்கி இருந்தார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு இலங்கையில் தனிநபர்களால் திருடப்பட்டதாக கூறப்படும் பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவந்து பொது சேவைக்கு பயன்படுத்த வேண்டும் என வசந்த சமரசிங்க கேட்டுக்கொண்டார்.

வெளிநாடுகளில் அந்தத் தனியார் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை நாட்டுக்கு அனுப்பக் கோரும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என்றும் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

பிரபல செல்வந்தர்களின் இரகசிய கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பண்டோரா ஆவணத்தில் வெளிக்கொணரப்பட்ட இலங்கையர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து உடனடி விசாரணையை தொடங்குமாறு ஜனாதிபதி ஒக்டோபர் 6 ஆம் திகதி அறிவித்தார்.

இதனை அடுத்து இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி செயலகத்தின் சட்ட விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகமும் சட்டத்தரணியுமான ஹரிகுப்த ரோஹணதீர கடிதம் எழுதியிருந்தார்.

அதில் ஒக்டோபர் 6 ஆம் திகதி முதல் ஒரு மாதத்திற்குள் இந்த விடயம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டிருந்தபோதும் அந்தக் கடிதத்தில் நிருபமா ராஜபக்ஷவினதோ அல்லது நடேசனினதோ பெயர் குறிப்பிடப்படவில்லை.

எவ்வாறாயினும், கால அவகாசம் இருந்த போதிலும், நவம்பர் 8 ஆம் திகதி இடைக்கால அறிக்கை வழங்கப்பட்ட நிலையில், விசாரணை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் செயலாளர் அப்சரா கல்தேரா தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டு, தற்போதைய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பொது நிதியைப் பயன்படுத்தி மல்வானையில் வில்லா ஒன்றைக் கட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டது,. இந்தச் சம்பவம் தொடர்பாக நடேசன் மீதும் முறைகேடு தொடர்பாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

இருப்பினும் இருவரும் எந்த தவறும் செய்யவில்லை என மறுப்பு தெரிவித்துவருகின்ற போதும் தற்போதும் வழக்கு நீதிமன்றில் உள்ளது.

பண்டோரா ஆவணத்தில் வெளிக்கொணரப்பட்ட விடயங்கள் குறித்து முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபஷ டிசம்பர் முதலாம் திகதி இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கியுள்ளார்.

நடேசன் இதுவரை இரண்டு முறை சாட்சியம் வழங்கியுள்ள நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் இந்த விடயம் தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்படமாட்டார்கள் என இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

Related

Tags: திருக்குமார் நடேசன்நிருபமா ராஜபக்ஷ
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில் பாகிஸ்தான் அணி மகத்தான வெற்றி!

Next Post

வீதியை சீரமைக்குமாறு பிரதேச செயலாளருக்கு வவுனியா- சிதம்பரம் பகுதியை சேர்ந்த மக்கள் மகஜர்!

Related Posts

இடிந்து வீழ்ந்த முல்லைத்தீவு நாயாறு பாலம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!
இலங்கை

இடிந்து வீழ்ந்த முல்லைத்தீவு நாயாறு பாலம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!

2025-12-01
திருத்தப்பட்ட ரயில் சேவைகள் அறிவிப்பு!
இலங்கை

திருத்தப்பட்ட ரயில் சேவைகள் அறிவிப்பு!

2025-12-01
எட்டு அடியை விஞ்சிய நாகலகம் வீதியின் நீர்மட்டம்!
இலங்கை

எட்டு அடியை விஞ்சிய நாகலகம் வீதியின் நீர்மட்டம்!

2025-12-01
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவ அவசர ஒருங்கிணைப்பு பிரிவு!
இலங்கை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவ அவசர ஒருங்கிணைப்பு பிரிவு!

2025-12-01
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!
ஆசிரியர் தெரிவு

மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

2025-12-01
லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!
இலங்கை

லுணுவில விபத்துக்குள்ளான ஹெலிகொப்டரின் விமானி உயிரிழப்பு!

2025-11-30
Next Post
வீதியை சீரமைக்குமாறு பிரதேச செயலாளருக்கு வவுனியா- சிதம்பரம் பகுதியை சேர்ந்த மக்கள் மகஜர்!

வீதியை சீரமைக்குமாறு பிரதேச செயலாளருக்கு வவுனியா- சிதம்பரம் பகுதியை சேர்ந்த மக்கள் மகஜர்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட 10 பேருக்கும் விளக்கமறியல்!

சிறார்களுக்கான மரண தண்டனை தொடர்பான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம்

அருணாசல பிரதேசத்தில் மிதமான நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் அளவு கோளில் நிலநடுக்கம் - இலங்கைக்கு பாதிப்பா?

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
இடிந்து வீழ்ந்த முல்லைத்தீவு நாயாறு பாலம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!

இடிந்து வீழ்ந்த முல்லைத்தீவு நாயாறு பாலம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!

0
திருத்தப்பட்ட ரயில் சேவைகள் அறிவிப்பு!

திருத்தப்பட்ட ரயில் சேவைகள் அறிவிப்பு!

0
எட்டு அடியை விஞ்சிய நாகலகம் வீதியின் நீர்மட்டம்!

எட்டு அடியை விஞ்சிய நாகலகம் வீதியின் நீர்மட்டம்!

0
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவ அவசர ஒருங்கிணைப்பு பிரிவு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவ அவசர ஒருங்கிணைப்பு பிரிவு!

0
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

0
இடிந்து வீழ்ந்த முல்லைத்தீவு நாயாறு பாலம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!

இடிந்து வீழ்ந்த முல்லைத்தீவு நாயாறு பாலம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!

2025-12-01
திருத்தப்பட்ட ரயில் சேவைகள் அறிவிப்பு!

திருத்தப்பட்ட ரயில் சேவைகள் அறிவிப்பு!

2025-12-01
எட்டு அடியை விஞ்சிய நாகலகம் வீதியின் நீர்மட்டம்!

எட்டு அடியை விஞ்சிய நாகலகம் வீதியின் நீர்மட்டம்!

2025-12-01
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவ அவசர ஒருங்கிணைப்பு பிரிவு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவ அவசர ஒருங்கிணைப்பு பிரிவு!

2025-12-01
மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

மேலும் பலவீனமடையும் டித்வா புயல்!

2025-12-01

Recent News

இடிந்து வீழ்ந்த முல்லைத்தீவு நாயாறு பாலம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!

இடிந்து வீழ்ந்த முல்லைத்தீவு நாயாறு பாலம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்!

2025-12-01
திருத்தப்பட்ட ரயில் சேவைகள் அறிவிப்பு!

திருத்தப்பட்ட ரயில் சேவைகள் அறிவிப்பு!

2025-12-01
எட்டு அடியை விஞ்சிய நாகலகம் வீதியின் நீர்மட்டம்!

எட்டு அடியை விஞ்சிய நாகலகம் வீதியின் நீர்மட்டம்!

2025-12-01
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவ அவசர ஒருங்கிணைப்பு பிரிவு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவ அவசர ஒருங்கிணைப்பு பிரிவு!

2025-12-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.