• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
மக்களின் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தால் அது ஜனாதிபதிக்கு பிரச்சினையாக மாறும் – ரணில்

மக்களின் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தால் அது ஜனாதிபதிக்கு பிரச்சினையாக மாறும் – ரணில்

ஜனாதிபதி வீட்டிற்கு போவதா இல்லையா என்பதை தீர்மானிக்கவேண்டியது அவரே..!

Dhackshala by Dhackshala
2022/04/08
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
106 2
A A
0
73
SHARES
1.5k
VIEWS
Share on FacebookShare on Twitter

மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் அது ஜனாதிபதிக்கு பிரச்சினையாக மாறும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த செவ்வியில், பொதுமக்களின் உணர்வுகள் தங்களிற்கு எதிராக மாறியுள்ள போதிலும் இலங்கை ஜனாதிபதியாலும் பிரதமராலும் தொடர்ந்து எவ்வாறு பதவியில் நீடிக்க முடிகின்றது என கேள்வியெழுப்பப்பட்டது.

குறித்த கேள்விக்கு பதிலளித்த ரணில், “ஜனாதிபதியை பொறுத்தவரை அவர் ஐந்து வருடங்களிற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதேவேளை அவர் வீட்டிற்கு செல்லவேண்டும் என ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறும் வேளை போவதா இல்லையா என்பதை தீர்மானிக்கவேண்டியது அவரே.

அவர் தான் பதவி விலகப்போவதில்லை. எனினும் புதிய அமைச்சரவைக்கு தலைமை தாங்கப்போவதாக எமக்கு தெரிவித்துள்ளார்.

அடுத்தவாரம் இந்திய கடனுதவியின் கீழ் பல பொருட்கள் வரவுள்ளதால் பல விடயங்களிற்கு தீர்வு காணப்படும என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அனைத்து விடயங்களிற்கும் தீர்வு காணப்படுமா என்பது எனக்கு தெரியாது. தொடர்ந்தும் மின்வெட்டு நீடிக்கப்போகின்றது. ஆனால் அவற்றின் காலம் குறையும். நிச்சயம் சில தட்டுப்பாடுகள் காணப்படும்.

பிரதமரை பொறுத்தவரை அவர் தற்போது மிகச்சிறிய பெரும்பான்மையை கொண்டுள்ளார். சுமார் 40 உறுப்பினர்கள் அரசாங்கத்திலிருந்து விலகியுள்ளனர். எதிர்கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மூன்று அல்லது நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வித்தியாசமே காணப்படுகின்றது.

அடுத்த சில நாட்களில் அந்த நான்கைந்து பேரும் அரசாங்கத்திலிருந்து விலகுவார்கள். அரசாங்கம் பெரும்பான்மை இழக்கும் நிலையை ஏற்படுத்துவார்கள் என பலர் கருதுகின்றனர். இதன் பின்னர் என்ன நடக்கும் என்பது வெளிப்படையான விடயம்.

பிரதமர் பதவி என்பது தங்களால் எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெறமுடியும் என்பதிலேயே தங்கியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தங்களை உணர்கின்றனர். மேலும் சிலர் விலகினால் தங்களிற்கு பெரும்பான்மை இல்லை என அவர்கள் உணர்கின்றனர்.

அதேவேளை எதிர்க்கட்சி என்பது தனியொரு கட்சியில்லை. பல குழுக்கள் உள்ளன. தேவையான 113 பெறவேண்டும். மாற்று அரசாங்கத்தை அமைக்கவேண்டும் என்றால் அவர்கள் ஐக்கியப்படவேண்டும்- ஒன்றிணையவேண்டும்.

ஜனாதிபதியை பொறுத்தவரை அவர்கள் மக்களின் மனோநிலையை அவதானிக்கவேண்டும்- மக்கள் தான் சொல்வதை ஏற்கப்போகின்றார்களா அல்லது அவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போகின்றார்களா என்பதை அவர் உன்னிப்பாக அவதானிக்கவேண்டும். அவர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் அது அவருக்கு பிரச்சினையாக மாறும்” என மேலும் தெரிவித்தார்.

மேலும் இதன்போது, ஆர்ப்பாட்டத்தின் அளவு உங்களை ஆச்சரியப்படுத்தியுள்ளதா? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,  “இவ்வாறான ஆர்ப்பாட்டம் மே, ஜூன் மாதத்திலேயே இடம்பெறும் என எதிர்பார்த்தேன். முன்கூட்டியே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றமை குறித்து நான் ஆச்சரியமடைந்தேன்.

ஆனால் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உருவாகிக்கொண்டிருந்தது. மின்சாரம் 13 மணித்தியாலங்கள் துண்டிக்கப்பட்டால், பிள்ளைகளால் படிக்க முடியாவிட்டால், பரீட்சை எழுதுவதற்கு பேப்பர் இல்லாவிட்டால், மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லை. ஆகவே ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சிலர் இரண்டுநேரம் மாத்திரம் உண்கின்றனர். இலங்கையர்கள் மூன்று நேரம் உணவுண்டவர்கள். விலைகள் அதிகரிக்கின்றன, பணவீக்கம் அதிகரிக்கின்றது. ஆகவே இந்த பிரச்சினைகள் அனைத்தும் அனைத்தும் அரசாங்கத்திற்கு எதிராக திரும்பியுள்ளன” என தெரிவித்தார்.

Related

Tags: ரணில் விக்ரமசிங்க
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பத்திரிகை கண்ணோட்டம் 08 04 2022

Next Post

பனை அபிவிருத்தி சபையினால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு!

Related Posts

இந்த ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பில் விசேட அறிவித்தல்
இலங்கை

இந்த ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பில் விசேட அறிவித்தல்

2026-01-14
இலங்கை

திருகோணமலை புத்தர் சிலை வழக்கு; பலாங்கொடை கஸ்ஸப தேரர் உட்பட 04 பிக்குகளுக்கு விளக்கமறியல்!

2026-01-14
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது
கொழும்பு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது

2026-01-14
மீண்டும் நம்பர் 1 வீரராக மாறினார் விராட் கோலி!
ஆசிரியர் தெரிவு

மீண்டும் நம்பர் 1 வீரராக மாறினார் விராட் கோலி!

2026-01-14
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!
ஆசிரியர் தெரிவு

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
தைப்பொங்கலை வரவேற்க தயாராகி வரும் மலையக மக்கள்
மலையகம்

தைப்பொங்கலை வரவேற்க தயாராகி வரும் மலையக மக்கள்

2026-01-14
Next Post
பனை அபிவிருத்தி சபையினால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு!

பனை அபிவிருத்தி சபையினால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு!

புதிய நிதி அமைச்சர் அலி சப்ரி பதவி விலகினார்

அலி சப்ரியின் இராஜினாமா கடிதத்தினை ஏற்க மறுத்தார் ஜனாதிபதி? புதிய அமைச்சரவையில் அவரே நிதியமைச்சர்?

சபையில் மூன்று முக்கியமான கேள்விகளை தொடுத்தார் சஜித்

நீங்கள் போகவில்லை என்றால் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவோம் - சஜித் எச்சரிக்கை

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
இந்த ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பில் விசேட அறிவித்தல்

இந்த ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பில் விசேட அறிவித்தல்

0

திருகோணமலை புத்தர் சிலை வழக்கு; பலாங்கொடை கஸ்ஸப தேரர் உட்பட 04 பிக்குகளுக்கு விளக்கமறியல்!

0
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது

0
மீண்டும் நம்பர் 1 வீரராக மாறினார் விராட் கோலி!

மீண்டும் நம்பர் 1 வீரராக மாறினார் விராட் கோலி!

0
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

0
இந்த ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பில் விசேட அறிவித்தல்

இந்த ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பில் விசேட அறிவித்தல்

2026-01-14

திருகோணமலை புத்தர் சிலை வழக்கு; பலாங்கொடை கஸ்ஸப தேரர் உட்பட 04 பிக்குகளுக்கு விளக்கமறியல்!

2026-01-14
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது

2026-01-14
மீண்டும் நம்பர் 1 வீரராக மாறினார் விராட் கோலி!

மீண்டும் நம்பர் 1 வீரராக மாறினார் விராட் கோலி!

2026-01-14
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

Recent News

இந்த ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பில் விசேட அறிவித்தல்

இந்த ஆண்டிற்கான கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்தல் தொடர்பில் விசேட அறிவித்தல்

2026-01-14

திருகோணமலை புத்தர் சிலை வழக்கு; பலாங்கொடை கஸ்ஸப தேரர் உட்பட 04 பிக்குகளுக்கு விளக்கமறியல்!

2026-01-14
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் மீண்டும் உச்சத்தைப் பதிவு செய்தது

2026-01-14
மீண்டும் நம்பர் 1 வீரராக மாறினார் விராட் கோலி!

மீண்டும் நம்பர் 1 வீரராக மாறினார் விராட் கோலி!

2026-01-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.